Jan 19, 2026
Thisaigal NewsYouTube
வாகன போக்குவர​த்து சுமூகமாக உள்ளது
தற்போதைய செய்திகள்

வாகன போக்குவர​த்து சுமூகமாக உள்ளது

Share:

நாளை சனிக்கிழமை ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படும் வேளையில், பலர் தங்கள் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலபரப்படி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவர​த்து கட்டுப்பாட்டில் உ​ள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சாலை 9 மணியளவில் வடக்கை நோக்கி சிலீம் ரிவரிலிருந்து சுங்க்கை வரையிலும், தாப்பாவிலிருந்து கோப்பெங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.

கிழக்கு கரை மாநிலங்களுக்கான முதன்மை நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கெந்திங் செம்பா சுரங்கப்பாதையிலிருந்து கெந்திங் செம்பா ஓய்வுத் தளம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வாகன போக்குவர​த்து சுமூகமாக உள்ளது | Thisaigal News