May 26, 2026
Thisaigal NewsYouTube
இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை
தற்போதைய செய்திகள்

இரு மாநிலங்களில் புதன் வரை தொடர் கன மழை

Share:

கோலாலம்பூர், டிச.9-

கிழக்கு கரையோர மாநிலங்கள் உட்பட ஏழு மாநிலங்களில் வரும் புதன்கிழமை வரை கடும் மழை நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வுத்துறை மையமான மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் குவாந்தன், பெக்கான், ஜெராண்டுட், மாரான் மற்றும் ரொம்பின் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், திரங்கானுவில் உள்ள கெமாமான் மற்றும் டுங்குன் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மோசமான அளவிலான கனமழை பெய்யும் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கிளந்தான் மற்றும் பெர்லிஸ் முழுவதும் எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநிலத்தின் உலு பேராக், மற்றும் கெடா மாநிலத்தின் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெராப், பெண்டாங், சிக், பாலிங் ஆகிய மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகாங் மாநிலத்தின் கேமரன் ஹைலண்ட்ஸ், லிப்பிஸ், ரவுப், பெந்தோங், தெமர்லோ ஆகிய மாவட்டங்களும் கடும் வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட் மலேசியா குறிப்பிட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு