Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புகைபிடித்து டீச‌ல் நிரப்பிய பேருந்து ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

புகைபிடித்து டீச‌ல் நிரப்பிய பேருந்து ஓட்டுநர்

Share:

ஈப்போ, மார்ச் 1 -

பெஹ்ராங் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் புகைபிடித்து கொண்டு டீசல் நிரப்பும் 57 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்திருப்பதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் ஹஸ்னி மொகமட் நாசிர் தெரிவித்தார்.

இதுக்குறித்து பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் உள்நாட்டு வாணிபம், வாழ்கை செலவினங்கள் அமைச்சகத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மொகமட் ஹஸ்னி குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய செயல் மற்றவர்களை பாதிப்பதுடன் பயனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொகமட் ஹஸ்னி கூறினார்.

இவை புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிமுறைகள் 2004 இன் கீழ் குற்றச்சாட்டப்படுவதுடன், குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10,000 வெள்ளி அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு