Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் Nga Kor Ming விவகாரம் தீர்வு காணப்பட்டது
தற்போதைய செய்திகள்

அமைச்சர் Nga Kor Ming விவகாரம் தீர்வு காணப்பட்டது

Share:

ஈப்போ, மார்ச் 1 -

மற்ற வாகனங்களுங்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து சென்ற வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கின் அதிகாரத்துவ வாகனம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் மொகமட் யுஸ்ரி ஹாசான் தெரிவித்துள்ளார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவிற்கு அருகில் அம்புலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்ற அமைச்சர் ங்கா கொர் மிங் கின் அதிகாரத்துவ வாகனம் தொடர்பான காணொளி ஒன்று கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக்கொண்டார்.

அந்த வாகனத்தின் உரிமையாளர் தாம் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர் ங்கா கொர் மிங் , போலீசார் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்று அறிவித்து இருந்தார்.

எனினும் இவ்விவகாரம் நீதிமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் செலுத்தப்பட்டு விட்டதால் இதற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக மொகமட் யுஸ்ரி ஹாசான் விளக்கம் அளித்துள்ளார். .

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு