Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் பஸ்-லாரி மோதி விபத்து: 7 பேர் பரிதாப பலி

Share:

ஆமாதாபாத், பிப்.21-

குஜராத்தில் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணியை மேற்கொண்டனர். உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

இவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News