தமக்கு எதிராக அவதூறான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள துன் மகாதீர் முகமது, பிரதமர் பதிலளிப்பதற்கு ஏதுவாக, கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
2 வாரங்களுக்கு முன்பு, ஷா ஆலாமில் நடைபெற்ற பி.கெ.ஆர் கட்சியின் சிறப்பு தேசிய மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆற்றிய உரை தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.
நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த 22 ஆண்டு காலத்தில், குடும்பத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக, அன்வார் குற்றஞ்சாட்டி இருப்பதாக கூறி, துன் மகாதீர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


