தங்காக், மார்ச்.29-
தங்காக் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 155.8 வது கிலோமீட்டரில் நேற்று மாலை நிகழ்ந்த கார் விபத்தில் 46 வயது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 8 வயது மகள் படுகாயமடைந்தார். ஜோகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எம்பிவி வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது மனைவி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது என தங்காக் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரொஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த Sufaat Aini என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழக்க, பின் இருக்கையில் இருந்த சிறுமி மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.








