Mar 10, 2026
Thisaigal NewsYouTube
12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்

Share:

சரவாக் மாநிலத்தில் மனித கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய பல்வேறு சோதனைகளில் 12 இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 19 முதல் 22 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கடத்தல் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் டட்லி என்று அடையாளம் கூறப்பட்ட 40 வயதுடைய உள்ளூர்வாசி மற்றும் 25க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய மேலும் 4 நபர்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலினால் அந்த 12 இந்தியப் பிரஜைகளும் ஏமாற்றப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரஸ்லின் குறிப்பிட்டார்.

12 இந்தியப் பிரஜைகளும் கோலாலம்பூரை வந்து சேர்வதற்கு முன்பு அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 20 ஆயிரம் வெள்ளி முதல் 25 ஆயிரம் வெள்ளி வரை சேவைக் கட்டணமாக சம்பந்தப்பட்ட கும்பல் பெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரஸ்லின் மேலும் விவரித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து