Aug 4, 2026
Thisaigal NewsYouTube
14 போர் பதற்ற நாடுகளிலுள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களை வெளியேற்ற மலேசியா தயாராகிறது
தற்போதைய செய்திகள்

14 போர் பதற்ற நாடுகளிலுள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களை வெளியேற்ற மலேசியா தயாராகிறது

Share:

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மோதலால் பாதிக்கப்பட்ட 14 நாடுகளில் உள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களின் இருப்பிடத்தை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ லூகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏற்பட்ட போர் மற்றும் மோதல் சூழல்களை கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், அமைச்சு, அரசு சாரா அமைப்புகள், பயண முகவர்கள், உம்ரா சேவை நிறுவனங்கள், அரச மலேசிய விமானப் படை, விமான நிறுவனங்கள் மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவற்றுடன் இணைந்து முழுமையான அவசர வெளியேற்றத் திட்டம் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தங்களது இருப்பிடத்தை தூதரகங்களில் பதிவு செய்யவும், மின்-துதரங்கம் மற்றும் மைவேர்ல்ட் அலர்ட் செயலி மூலம் அவசர தகவல்களைப் பெறவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

தீயணைப்புத் துறை உரிமக் கடிதம் வழங்குவதில் முறைகேடு / அதிகாரி மீது இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

தீயணைப்புத் துறை உரிமக் கடிதம் வழங்குவதில் முறைகேடு / அதிகாரி மீது இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட விமானியுடன் தொடர்பு? –கேஎல்ஐஏ ஊழியரிடம் போலீஸ் விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட விமானியுடன் தொடர்பு? –கேஎல்ஐஏ ஊழியரிடம் போலீஸ் விசாரணை

  திவேட் நாட்டின் முதன்மைப் பாதை: மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி

திவேட் நாட்டின் முதன்மைப் பாதை: மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி

சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்

சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்

பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்

பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்

நிச்சயித்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – ஹோட்டல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

நிச்சயித்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – ஹோட்டல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை