பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மோதலால் பாதிக்கப்பட்ட 14 நாடுகளில் உள்ள 21 ஆயிரத்து 427 மலேசியர்களின் இருப்பிடத்தை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ லூகானிஸ்மன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏற்பட்ட போர் மற்றும் மோதல் சூழல்களை கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், அமைச்சு, அரசு சாரா அமைப்புகள், பயண முகவர்கள், உம்ரா சேவை நிறுவனங்கள், அரச மலேசிய விமானப் படை, விமான நிறுவனங்கள் மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவற்றுடன் இணைந்து முழுமையான அவசர வெளியேற்றத் திட்டம் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தங்களது இருப்பிடத்தை தூதரகங்களில் பதிவு செய்யவும், மின்-துதரங்கம் மற்றும் மைவேர்ல்ட் அலர்ட் செயலி மூலம் அவசர தகவல்களைப் பெறவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








