Mar 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பூட்டிய வீட்டில் 72 வயது மூதாட்டியும், 39 வயது மகனும் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பூட்டிய வீட்டில் 72 வயது மூதாட்டியும், 39 வயது மகனும் இறந்து கிடந்தனர்

Share:

பினாங்கு, தெலுக் கும்பாரில் உள்ள தாமான் சஹாபாத் அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 72 வயது மூதாட்டியும் அவரது 39 வயது மகனும் இறந்த நிலையில் கண்டறியப்பட்டனர்.

பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அங்கு சென்றதாக அதன் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சாகூன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இறந்த கிடந்த இருவரில், ஒருவர் வரவேற்பு அறையிலும், மற்றொருவர் படுக்கை அறையிலும் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மேல்விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News