ஈப்போ, ஜாலான் டத்தோ ஓன் ஜாஃபரில் உள்ள இரண்டு அடுக்குமாடி பாழடைந்த கட்டிடத்தில் நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டிக்கிடந்த அந்த கட்டிடத்திற்குள் செல்ல போலீஸ் துறை உதவி கோரியதை அடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மதியம் 1.31 மணியளவில் அங்கு விரைந்தனர்.
கட்டிடத்தின் நுழைவாயில் இரும்பு கிரில் கேட் கொண்டு பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் ரம்பம் மூலம் அதனை அறுத்து உள்ளே நுழைந்தனர். அப்போது கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு நபர் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.








