Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் பிடியில் உள்ள மலேசியர்களை மீட்க அரச தந்திர சகாக்களுடன் விவாதிக்கவிருக்கிறார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் பிடியில் உள்ள மலேசியர்களை மீட்க அரச தந்திர சகாக்களுடன் விவாதிக்கவிருக்கிறார் பிரதமர்

Share:

சிப்பாங், அக்டோபர்.02-

காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற “Global Sumud Flotilla” எனும் அனைத்துலகக் கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைப் பிடித்துள்ள வேளையில் அந்த மனிதாபிமான பயணத்தில் இடம் பெற்ற மலேசியர்களை மீட்கும் முயற்சியாக அரச தந்திர சகாக்களைத் தொடர்பு கொண்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருக்கிறார்.

துருக்கி, எகிப்து மற்றும் சவூதி அரேபியாவின் தூதரகச் சகாக்களைத் தொடர்பு கொண்டு பிரதமர் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக Sumud Nusantara கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி தெரிவித்தார்.

மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களுடன் காஸாவை நோக்கிச் சென்ற “Global Sumud Flotilla” கப்பல், இஸ்ரேல் படையினரால் வழிமறிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் 8 மலேசியர்கள் உட்பட ஆசியான் மற்றும் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் உள்ளனர். அந்தக் கப்பல் தற்போது இஸ்ரேலின் பிடியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்