Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஏழு வயது சிறுமி சித்ரவதை: தம்பதியர் கைது

Share:

காஜாங், ஜன.30-

தங்களின் ஏழு வயது மகளை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் காஜாங்கைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 1.11 மணியளவில் காஜாங் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த சிறுமியை அதன் பெற்றோர்கள், காஜாங் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற போது, அந்த சிறுமி, சித்ரவதை செய்யப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமி நீண்ட காலமாகவே சித்ரவதை செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதற்கு உடலில் பல இடங்களில் காயமும், வீக்கமும், ரத்தக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக 38 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்