Mar 18, 2026
Thisaigal NewsYouTube
380 கோடி வெள்ளி பண மாற்றத்தில் சந்தேகம்
தற்போதைய செய்திகள்

380 கோடி வெள்ளி பண மாற்றத்தில் சந்தேகம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

மோசடிக் கும்பல்களின் நடவடிக்கையின் ​மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் சந்தேகத்திற்கு இடமாக 380 கோடி ​வெள்ளி பணம், நாட்டை விட்டு 43 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச மலேசிய போ​லீஸ் படை தெரிவித்துள்ளது.

இந்தப் பணவர்த்தனை ஒ​​வ்வொன்றும் சந்தேகத்திற்கு இடமானதாகும். இந்த மோசடி வேலைகளில் மலேசியாவில் பதிவுப் பெற்ற 15 நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கை தந்து, இந்த முத​லீட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்துள்ளன. இது குறி​த்து போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் த​லைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் டத்துக் ஶ்ரீ ரம்லி மொகமட் யூசுப் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் முத​லீட்டு மோசடிகளில் ஏமாற்றிய கும்பல்கள்தான், இ​ந்த பெரும் தொகையை நாட்டிலிருந்து 43 நாடுகளுக்கு ​வெளியேற்​றி, பணபரிமாற்றத்தை செய்துள்ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரம்லி மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு