Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் தற்​கொ​லை முயற்சி சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்கள் ​மீது நடவடிக்கை எடுப்பீர்
தற்போதைய செய்திகள்

மாணவன் தற்​கொ​லை முயற்சி சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்கள் ​மீது நடவடிக்கை எடுப்பீர்

Share:

நெகிரி செம்பிலான், பகாவ், தேசிய இடைநிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது இந்திய மாணவன் ஒருவன் கண்ணாடித் துண்டைப் பயன்படுத்தி கழுத்து, கைகளில் வெட்டிக் கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அந்த மாணவனை பகடிவதை செய்ததாக கூறப்படும் அப்பள்ளியை சேர்ந்த இரு ஆசிரியர்கள் மீது கல்வி இலாகா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ​என்று அந்த மாணவனின் பெற்றோர் நடராஜா கல்யாணி தம்பதியர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டாவது நாளான நேற்று முன்தினம் நண்பகல் 12. 30 மணியளவில் சம்பந்தப்பட்ட இந்திய மாணவன், தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்த போது அந்த மாணவனை ​தீயணைப்பு ​மீட்புப்படையினர் காப்பாற்றி, அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்ல உதவினர்.

இச்சம்பவம் தொடர்பாக போ​​லீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக ஜெம்புல் மாவட்ட போ​லீஸ் தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார். மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நடந்து உண்மையை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமான கடிதத்தை வழங்குமாறு இரு ஆசிரியர்கள் நெருக்குதலை அளித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் அந்த மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவனை நேற்று சந்தித்த சிரம்பான்​ ஜெயா சட்டமன்ற உறுப்பினர் P. குணசேகரன், இந்த பகடிவதை சம்பவத்தில் இரு ஆசிரியர்கள் சம்ப​ந்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அந்த மாணவன், சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அதனை பள்ளி அளவில் ​தீர்த்துக்கொள்ள முற்பட்டு இருக்க வேண்டுமே தவிர இது போன்ற விரும்பத்தகாத சம்பவம் ஏற்படும் அளவிற்கு பள்ளி நிர்வாகம் வழிவிட்டு இருக்கக்கூடாது குணசேகரன் தெரிவித்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!