டுங்குன், ஜூலை.11-
Ketengah Jaya-விலுள்ள மளிகைக் கடையில் தனியாக இருந்த 70 வயதுடைய பெண் கடை உரிமையாளரை, ஆயுதங்களுடன் வந்த மூவர் கட்டிப் போட்டு, நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் Nik Ab Halim Nik Mat கூறுகையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் அரிவாள் மற்றும் இரும்புக் கம்பியுடன் வந்த சந்தேக நபர்கள், அம்மூதாட்டியின் கைகளை கட்டி, வாயை டேப்பால் ஒட்டிவிட்டு, நகைகள், ரொக்கப் பணம், இரண்டு கைப்பேசிகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மூதாட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிபோயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சாம்பல் நிற Proton Iswara காரில் தப்பிச் சென்றதாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 395/397-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








