தோட்டத் தொழிலாளி ஒருவரால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓர் ஆடவரின் சடலம், சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிகிழமை, காலை 10 மணியளவில், மூவார், லெங்கா, பெல்டா மொக்கில் - புக்கிட் கெபோங் சாலையின் அருகில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ராயிஸ் முக்லீஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
அந்தச் சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா ஃபத்தீமா மருத்துவமனைக்கு அனுப்பட்ட நிலையில், இதுவரை இறந்தவரின் அடையாளம் கண்டறியப்படவில்லை என்று எசிபி ராயிஸ் முக்லீஸ் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


