பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-
குடும்பத்தினருடன் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது அலைவேகமாக அடித்ததில் சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்.
அந்த சிறுவன், தெய்வாதீனமாக நூலிழையில் தப்பிய காணொலி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொலியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் கடல் சார் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.








