சபா. கோத்தா கினபாலு, கெப்பாயான் தடுப்புக்காவலிலிருந்து தப்பிய கைதி ஒருவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அந்த நபர். இன்று காலை 11.50 மணியளவில் துவரான், மிம்பியான் ஜாடி ரிசோர்ட் அருகில் வனப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த போது, போலீஸ் குழு ஒன்று அந்த நபரை கைது செய்ததாக சபா மாநில போலீஸ் துணைத் கமிஷனர் ஷாஹுரினாயின் ஜயிஸ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், அந்த காட்டுப்பகுதியில் மறைந்துள்ளார் என்று பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதாக ஷாஹுரினாயின் ஜயிஸ் குறிப்பிட்டார்.








