இ- மடானி கிரெடிட் தொகை பெறுவதில் தோல்விக் கண்டவர்களின் விண்ணப்பங்களை நிதி அமைச்சு மறுபடியும் ஆராயவிருக்கிறது என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
அவ்விண்ணப்பங்கள் தொடர்பில் நிறைய தகவல்களை தாம் கோரியிருப்பதாகவும், முடிந்த வரையில் அவற்றுக்கு தீர்பு காணப்படும் என்றும் பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பசார் சொவ்ரஸ்தா வில் செய்தியாளர்களிம் பேசுகையில் லிம் ஹுய் யிங் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் நிதி அமைச்சு மக்களுக்கு பகிர்ந்து அளித்த தலா 100 வெள்ளி இ – மடானி கிரெடிட் திட்டத்தில் அத் தொகையை கோருவதில் நிறைய பேர் வெற்றி பெற்றுள்ள வேளையில் இன்னும் சிலர் அந்த தொகையை பெறுவதில் தோல்விக் கண்டுள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.







