அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றப்பின்னர் பிகேஆர் கட்சியிலிருந்து பெர்சத்து கட்சிக்கு தாவியதற்காக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸுரைடா கமருடீன், பிகேஆர், PKR கட்சிக்கு ஒரு கோடி வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று அளித்துள்ள தீர்ப்பு, இறுதியானது அல்ல என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
காரணம், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான ஜுரைடா கமருடின், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இன்னும் அடுத்தடுத்த நகர்வுகள் உள்ளன.
எனவே ஒரு கோடி வெள்ளி இழப்பீட்டை முன்னாள் அமைச்சரசான ஜுரைடா, பிகேஆர் கட்சி தலைமையகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு இறுதியானது அல்ல என்று அஸ்மின் அலி தெளிவுபடுத்தினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


