டிச. 11-
அடுத்த ஆண்டு முதல் 110 பள்ளிகளிலிருந்து 400 பள்ளிகளுக்கு hybrid எனப்படும் கலப்பு வகுப்பறை முறையில் கற்றல் கற்பித்தல் நடத்தப்படத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 340 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கல்வித் துணை அமைச்சர் Wong Kah Who தெரிவித்தார்.
கலப்பு வகுப்பறைகள் நகர்ப்புற பள்ளிகளில் மட்டும் அல்லாமல், புறநகர் பள்ளிகளிலும் நடத்தப்படும் என்றும், எந்த மாணவரும் கல்வியில் பின்தங்காமல் பார்த்துகொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த கற்றல் கற்பித்தல் முறை குறித்து ஆசிரியர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. கூடுதல் வகுப்பறைகள், பயிற்சிகள், இணைய இணைப்பு வ் வகுப்பின் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கானக் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் வர்றை விரைவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.








