Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் : மருத்துவமனையில் அனுமதிக்கக் குடும்பத்தினர் கோரிக்கை

Share:

காரினால் மோதி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 40 வயதான போலீஸ் இன்ஸ்பெக்டர் கமது கமல் ராஜ் சண்முகம் ஜாமீனில் விடுவிக்கப்படாமல் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக கமல் ராஜ் 'ஸ்கிசோஃப்ரினியா' எனும் தீவிர மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக அவரது வழக்கறிஞர் நந்த கோபன் தெரிவித்தார். அவர் முறையாக மருந்து உட்கொள்ளாததால் நிலைமை மோசமடைந்ததாகவும், அவரை வீட்டில் வைத்திருப்பதை விட மருத்துவமனையில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்றும் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மசுலியானா அப்துல் ரஷித், அவரை ஒரு மாத கால மனநலப் பரிசோதனைக்காகப் பேராக், உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அவர் மனநிலை சரியில்லாத காரணத்தால், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கத் தகுதியற்றவர் எனத் தற்காப்புத் தரப்பு வாதிட்டது. இதனால் பிணை வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை