புத்ராஜெயா,ஆகஸ்ட் 05-
சவூதி அரெபியாவின் இரண்டாவது முன்னனி நகரான JEDDAH [ ஜெட்டா]- விற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே Malaysia Airlines ஸின் MH156 விமானம், கோலாலம்பூருக்கே மீண்டும் திரும்பியிருப்பது , பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று அந்த தெசிய விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 259 யாத்ரீக பயணிகளுடன் பிற்பகல் 3.13 மணியளவில் புறப்பட்ட அந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ,அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மாலை 4.56 மணியளவில் கோலாலம்பூருக்கே திரும்பியது.
இதனை உறுதிப்படுத்திய மலேசி ஏர்லைன்ஸ் , தொழில்நூட்பக் காரணமாக MH156 விமானம் , திரும்பியது என்ற போதிலும் பயணிகள் , தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய வான் போக்கு வரத்து துறையின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ கப்டன் நோரசமான் மஹ்மூத் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.








