May 5, 2026
Thisaigal NewsYouTube
தாமான் போல்டன் டுரியான் கடை இடிப்பு விவகாரம் - நகராட்சி மன்றம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

தாமான் போல்டன் டுரியான் கடை இடிப்பு விவகாரம் - நகராட்சி மன்றம் மறுப்பு

Share:

செலாயாங், பிப்ரவரி.01-

சிலாங்கூர், தாமான் போல்டன் பகுதியில் உள்ள டுரியான் கடையை இடிப்பதற்கோ அல்லது அகற்றுவதற்கோ தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது செலாயாங் நகராட்சி மன்றம். சம்பந்தப்பட்டப் பகுதி தனியாரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த இடத்தின் வாடகை, மேலாண்மை விவகாரங்களில் நகராட்சி மன்றத்திற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று அதன் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகாரையும், காணொளிகளையும் குறித்துத் தாங்கள் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட MPS, இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கடை உரிமையாளர் ஏற்கனவே மூன்று காவற்படைப் புகார்களை அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் நிலவும் தவறான புரிதல்களைத் தவிர்க்கவே இந்த விளக்கம் அளிக்கப்படுவதாக செலாயாங் நகராட்சி மன்ற நிர்வாகம் கூறியுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்