Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொருட்களின் விலையை உயர்த்தும் வியாபாரிகளை அரசு பொறுத்துக் கொள்ளாது - அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பொருட்களின் விலையை உயர்த்தும் வியாபாரிகளை அரசு பொறுத்துக் கொள்ளாது - அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

சாரா உதவித் தொகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் எந்த ஒரு தரப்பினருக்கும் அரசாங்கம் பரிவு காட்டாது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் எச்சரித்துள்ளார்.

சிறு வியாபாரிகள் சிலர் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தி விட்டதாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள புகார்கள் குறித்து கருத்துரைத்த அவர் இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இப்புகார்கள் அனைத்தும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்க எதிர்ப்புச் சட்டம் 2011-ன் கீழ் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமீர் ஹம்ஸா அஸிஸான் குறிப்பிட்டார்.

அதே வேளையில், பேரங்காடிகள் சில மக்களுக்கு உதவும் வகையில் சிறப்புச் சலுகைகள் வழங்கி வருவதையும் அவர் பாராட்டினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி