Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்பு கோபுரத்தின் பராமரிப்புப் பணியின் போது குளவிகள் அச்சுறுத்தல்: அவதிக்குள்ளானப் பணியாளர்
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்பு கோபுரத்தின் பராமரிப்புப் பணியின் போது குளவிகள் அச்சுறுத்தல்: அவதிக்குள்ளானப் பணியாளர்

Share:

பத்து காவான், செப்டம்பர்.29-

சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்தின் மீது பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குளவிகளின் அச்சுறுத்தலுக்கு ஆனானார்.

இன்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, பத்து காவான் தொழில்பேட்டை பூங்காவில் லிங்காரான் கசுவா செலாத்தான் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையினால் 29 வயதுடைய அந்த பாகிஸ்தான் ஆடவர் காப்பாற்றப்பட்டார்.

தொலைத்தொடர்பு கோபுரத்தின் முதலாவது பத்து மீட்டர் உயரத்தில் குளவிக் கூடு இருப்பதை அறியாமல் உயரே ஏறிவிட்ட அந்த பாகிஸ்தான் ஆடவர், குளவிகள் சரமாரியாகப் பறக்கத் தொடங்கிய போதுதான், ஆபத்தின் தன்மை அறிந்து, கீழே உள்ள பணியாளர்களுக்குத் தகவல் அனுப்பியதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள், குளவிகள் துளைக்காத பாதுகாப்பு உடையை அணிந்த நிலையில் அந்த தொலைத் தொடர்பு பணியாளரைப் பாதுகாப்பாக மீட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்