Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தொலைத் தொடர்பு கோபுரத்தின் பராமரிப்புப் பணியின் போது குளவிகள் அச்சுறுத்தல்: அவதிக்குள்ளானப் பணியாளர்
தற்போதைய செய்திகள்

தொலைத் தொடர்பு கோபுரத்தின் பராமரிப்புப் பணியின் போது குளவிகள் அச்சுறுத்தல்: அவதிக்குள்ளானப் பணியாளர்

Share:

பத்து காவான், செப்டம்பர்.29-

சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்தின் மீது பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குளவிகளின் அச்சுறுத்தலுக்கு ஆனானார்.

இன்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, பத்து காவான் தொழில்பேட்டை பூங்காவில் லிங்காரான் கசுவா செலாத்தான் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையினால் 29 வயதுடைய அந்த பாகிஸ்தான் ஆடவர் காப்பாற்றப்பட்டார்.

தொலைத்தொடர்பு கோபுரத்தின் முதலாவது பத்து மீட்டர் உயரத்தில் குளவிக் கூடு இருப்பதை அறியாமல் உயரே ஏறிவிட்ட அந்த பாகிஸ்தான் ஆடவர், குளவிகள் சரமாரியாகப் பறக்கத் தொடங்கிய போதுதான், ஆபத்தின் தன்மை அறிந்து, கீழே உள்ள பணியாளர்களுக்குத் தகவல் அனுப்பியதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள், குளவிகள் துளைக்காத பாதுகாப்பு உடையை அணிந்த நிலையில் அந்த தொலைத் தொடர்பு பணியாளரைப் பாதுகாப்பாக மீட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து