Mar 19, 2026
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகக் கணக்கிற்கு முழுக்குப் போட்டார்
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகக் கணக்கிற்கு முழுக்குப் போட்டார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தோற்றுநர் டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதற்கு முடிவு செய்ய்துள்ளார்.

பொய்யான செய்திகள், தொடர்வதைக் கண்டு தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், சமூக ஊடகங்களின் கணக்குகளை மூடுவதென முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தமக்குச் சொந்தமான திரெட்ஸ் கணக்கை மூடி விட்டதாகவும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இன்று மூடுவதாகவும் தமது முகநூலில் டோனி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் தமக்கு விருப்பமானவை என்று குறிப்பிட்டுள்ள Capital A நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான டோனி, தமது விருப்பமான பொழுது போக்கிற்கு அது சிறந்தத் தளமாக விளங்கியது என்றார்.

ஆனால், பொய்யான நிறைய ஏமாற்று வேலைகளுக்குத் தாம் பலிகடாவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலே இத்தகையப் பொய்யான செய்திகளுக்கு, மூன்று சமூக ஊடகங்களுக்கும் பிரதானச் சொந்தக்காரராக விளங்கும் மேத்தா முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும் என்றார் டோனி .

ஆசியாவில் பல பகுதிகளில் ஏமாற்று வேலைகளும், மோசடிகளும் நிகழ்வதாக நாம் பேசி வருகிறோம். ஆனால், மேத்தா கொண்டுள்ள மிகப் பெரிய மொத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவற்றைத் தடுத்து இருக்க முடியும் என்று டோனி குறிப்பிட்டார்.

அதே வேளையில் தமக்கு எதிராகக் கூறப்பட்டு வரும் எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டு தாம் மூன்று சமூக ஊடகங்களின் கணக்குகளையும் மூடவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“அத்தகைய விமர்சனங்கள், நாள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதற்கு பெரும் உந்துதலாக இருந்தது. போதுமான அளவிற்கு என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. அவர்கள் தந்த ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டோனி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து