பிகேஆர் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் எம்.பி. யுமான சுரைடா கமாருடீன், 14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது, கட்சியின் பலமே தவிர அவரின் சொந்த பலம் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைப்புடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியில் வெற்றிபெற்ற பின்னர், கட்சி விட்டு கட்சி தாவியுள்ள சுரைடாவிற்கு எதிராக, ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டு பிகேஆர் கட்சி தொடுத்துள்ள வழக்கில் சைப்புடீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுரைடா, வெற்றிபெற்ற அம்பாங் நாடாளுமன்ற தொகுதியில் அவருக்கென்று சொந்த வாக்காளர்கள் இல்லை. மாறாக, பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரை வெற்றிபெற செய்துள்ளனர் என்று தமது வழக்கு மனுவில் சைப்புடீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


