நெகிரி செம்பிலான் மாநில மஇகா தலைவர் டத்தோ எல். மாணிக்கம், இன்று கட்சியிலிருந்து விலகினார். ஜெராம் பாடாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான எல். மாணிக்கம் மஇகாவில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்த விலகல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும், மஇகாவில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கட்சியின் தலைமையிடம் விளக்கி விட்டதாக எல். மாணிக்கம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


