கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-
நாட்டின் 67 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தின பிரதான உரையை வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, புத்ராஜெயா, அனைத்துலக மாநாட்டு மையத்தில் நிகழ்த்தவிருக்கிறார்.
மலேசியர்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் அதேவேளையில் தேசிய தினக்கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மாலை 4.30 மணிக்கு பிரதமரின் உரை தொடங்கும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் சமூக மேம்பாட்டுப்பிரிவு செயலாளர் ஜைமி ஷாரி தெரிவித்துள்ளார்.








