க வடக்கு–தெற்கு நெடுஞ்சாலைரயில் ஜோகூர், குளுவாங் அருகில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் வேன் மோதிய விபத்தில் 42 வயது பெண் உயிரிழந்தார். மேலும், அவரது உறவினர்கள் மூவர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 55.1ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஜோகூர் பாருவிலிருந்து ஆயர் ஈத்தாம் நோக்கிச் சென்ற லாரி, வலது பாதையில் பழுதாகி நின்றுள்ளது. ஓட்டுநர் அபாய விளக்குகளை எரியவிட்டு, லாரியின் பின்னால் எச்சரிக்கை முக்கோணத்தையும் வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அதே பாதையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் மோதியது.
வேனை ஓட்டிய 42 வயது பெண், தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 38 வயது கணவரும், 12 வயது மகனும் காயமின்றி தப்பினர்.








