May 26, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாகனமோட்டியை போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

அந்த வாகனமோட்டியை போலீசார் கைது செய்தனர்

Share:

பாரிட் புந்தார், நவ.14-


பேரா, பாரிட் புந்தார், கோல குவாவ்- வில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித்தள்ளியப் பின்னர் மிக சாதுரியமாக தப்பிச் சென்ற வெள்ளை நிற காரின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபரின் இந்த அராஜக செயல் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 48 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அடையாளம் காணப்பட்டு வளைத்துப் பிடிக்கப்பட்டதாக கிரியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனா யூசோப் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் புகார் பெறப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வெள்ளை நிற கார், இதற்கு முன்பு மற்ற வாகனங்களை மோதித்தள்ளியது.

இதனைத் தொடர்ந்து அந்த காரை தடுத்து நிறுத்துவதற்கு 37, 40 வயது மதிக்கத்தக்க இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் முற்பட்ட வேளையில் அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் மோதித்தள்ளி விட்டு, அந்த வெள்ளை நிற காரோட்டி லாவகமாக தப்பியுள்ளதாக ஜுனா யூசோப் குறிப்பிட்டார்.

Related News

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்