எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஈப்போ மாநகரம், சுகாதார மாநகரமாக உறுமாற உள்ளதாக ஈப்போ நகரத்தின் டத்தோ பண்டார் டத்தோ ரூமைசி பஹாரின் தகவல் தெரிவித்துள்ளார். ஈப்போ வட்டாரத்தைச் சுற்றி 5 புதிய மருத்துவமனைகளும் இதர சுகாதார வசதிகளும் கட்டி முடிக்கும் நிலையில் இருப்பதாக கூறியதுடன் ஏறக்குறைய 1 பில்லியன் முதலீடுகள் இந்த சுகாதார செயல்முறை திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்த சுகாதர செயல்முறைதிட்டத்தின வழி 8000 பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிட்டும் எனவும் ஈப்போ வட்டார மக்கள் அவர்களின் வாழ்வாதரத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் பெற்றுக் கொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என ஈப்போ மாநகர டத்தோ பண்டார் மேலும் கூறினார்.








