11 வயது சிறுமியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது தனிநபர் ஓட்டுநர் ஒருவர், இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
முகமது ரஃபிக்ஸாம் ஹஃபெக் என்ற அந்த வாகன ஓட்டுநர், கடந்த மே 19-ஆம் தேதி, ஜாலான் இல்மு பகுதியில் அச்சிறுமியை அவரது தந்தையிடமிருந்து கடத்தி, புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மாஜிஸ்திரேட் அத்திகா முகமது முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.








