தமது இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் மனித வள அமைச்சர் வி.சிவகுமாரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைத்துள்ளது. லஞ்ச ஊழல் தொடர்பில் தமது அரசியல் பெண் அந்தரங்க செயலாளரும், சிறப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டது தொடர்பில், 52 வயதான சிவகுமார் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி.ஆர்.எம். மினால் அழைக்கப்பட்டுள்ளார்.
சிவகுமார் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளரா? அல்லது சந்தேகத்தின் பேரில் அழைக்கப்பட்டுள்ளாரா? என்பது உறுதி தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்ட விஷயத்திற்காக சிவகுமார், எஸ்.பி.ஆர்.எம். மினால் அழைக்கப்பட்டுள்ளார் என்று அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஆர்.எம். தம்மை இன்னும் அழைக்கவில்லை என்று அமைச்சர் சிவகுமார் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


