கோலாலம்பூர், பிப்ரவரி.24-
இன்று காலையில் நெரிசல் மிகுந்த நேரத்தில் எல்ஆர்டி ரயில் சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாகினர்.
காலை 7.44 மணியளவில் எல்ஆர்டி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பின்னர் அந்த ரயில் சேவை, மெனுவல் முறையில் இயக்கப்பட வேண்டியிருந்ததாக ரெபிட் கேஎல் விளக்கம் அளித்தது.
எனினும் காலை 8.10 மணியளவில், சேவைகள் முழுமையாகச் சீரடையும் வரை ரயில்களின் இயக்கங்கள் படிப்படியாகச் சரி செய்யப்பட்டன என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளின் நெரிசலைக் கட்டுப்படுத்த உதவி போலீசார் மற்றும் நிலைய ஊழியர்கள் நடைமேடைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.








