Jul 1, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு ஜோகூரில் 3 மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமான பால் உற்பத்தி!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு ஜோகூரில் 3 மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமான பால் உற்பத்தி!

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.01-

ஜோகூர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜெமாலுவாங் டெய்ரி வெல்லி திட்டத்தின் மூலம் சுமார் மூன்று மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமாக பால் உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த JDV திட்டத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,000-த்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளைக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில விவசாயம், வேளாண்மை சார்ந்த தொழில் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஸஹாரி சாரிப் கூறியுள்ளார்.

தற்போது சினையாக உள்ள கறவை மாடுகளுக்கு, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் 1,000 கன்றுகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு 3 மில்லியன் லிட்டர்களாக இருக்கும் பால் உற்பத்தி, அடுத்தடுத்த ஆண்டுகளில் 4 முதல் 5 மில்லியனாக உயரும் என்றும் ஸஹாரி சாரிப் தெரிவித்துள்ளார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி