Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு ஜோகூரில் 3 மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமான பால் உற்பத்தி!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு ஜோகூரில் 3 மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமான பால் உற்பத்தி!

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.01-

ஜோகூர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜெமாலுவாங் டெய்ரி வெல்லி திட்டத்தின் மூலம் சுமார் மூன்று மில்லியன் லிட்டர்களுக்கும் அதிகமாக பால் உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த JDV திட்டத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,000-த்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளைக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில விவசாயம், வேளாண்மை சார்ந்த தொழில் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஸஹாரி சாரிப் கூறியுள்ளார்.

தற்போது சினையாக உள்ள கறவை மாடுகளுக்கு, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் 1,000 கன்றுகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு 3 மில்லியன் லிட்டர்களாக இருக்கும் பால் உற்பத்தி, அடுத்தடுத்த ஆண்டுகளில் 4 முதல் 5 மில்லியனாக உயரும் என்றும் ஸஹாரி சாரிப் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை