தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமரும், முன்னாள் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி அனுதாப அடிப்படையில் மாமன்னர் அப்துல்லாவை கட்சிக் கேட்டுக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விளக்கம் அளித்துள்ளார்.
நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கியாக வேண்டும் என்ற தோரணையில் மாமன்னரை அம்னோ கேட்டுக்கொள்ளாது. மாறாக அனுதாப அடிப்படையில் அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாமன்னரை கேட்டுக்கொள்ளும் என்று அகமட்ஜாஹிட் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் சிறைச்சாலையில் நோன்பும் துறக்கும் அம்னோவின் முன்னாள் தலைவர் நஜீப் நிலை குறித்து கட்சி அனுதாபம் கொள்வதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


