தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமரும், முன்னாள் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கும்படி அனுதாப அடிப்படையில் மாமன்னர் அப்துல்லாவை கட்சிக் கேட்டுக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விளக்கம் அளித்துள்ளார்.
நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கியாக வேண்டும் என்ற தோரணையில் மாமன்னரை அம்னோ கேட்டுக்கொள்ளாது. மாறாக அனுதாப அடிப்படையில் அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாமன்னரை கேட்டுக்கொள்ளும் என்று அகமட்ஜாஹிட் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் சிறைச்சாலையில் நோன்பும் துறக்கும் அம்னோவின் முன்னாள் தலைவர் நஜீப் நிலை குறித்து கட்சி அனுதாபம் கொள்வதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


