கெமாமன் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் டிஏபி-யைக் கருப்பு ஆடாக சித்ரித்து ஒற்றுமை அரசாங்கத்தைப் பிளவு படுத்தும் சில தரப்பினரின் முயற்சி தோல்வியடைந்தது என்பதை அக்கட்சியின் உறுதியான ஒத்துழைப்பைக் காட்டுகின்றது என டிஏபி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டிஏபி கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான சயரெட்சன் ஜோஹன் கூறுகயில், அவ்வாறு குற்றஞ்சாட்டும் தரப்பினரின் ஆய்வு தவறான நோக்கம் கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டால் அதற்குக் காரணம் டிஏபி எனவும் கெமாமான் இடைத் தெர்தலில் தோல்வி அடைந்ததற்கும் டிஏபி தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுவது மிக எளிதாகப் போய்விடும் என ஒரு சில தரப்பினர் கருதுகின்றனர்.
ஆனால், தேசிய முன்னணியும் அம்னோவும் மடானி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் வலுவான ஆதரவால் டிஏபி யை அலிகடா ஆக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என சயரெட்சன் ஜோஹன் தெரிவித்தார்.








