கோல சிலாங்கூர், கம்போங் ஜயா செத்தியா வில் 10 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், அப்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கிய மழையால், அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இது குறித்து பேசிய கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயற்குழுவின் தலைவரும் கோல சிலாங்கூர் மாவட்ட அதிகாரியுமான முஹமாட் ராயிஸ் ரட்சுவான் தெரிவிக்கயில், நேற்று மாலை 4 மணி தொடங்கி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது டெவான் ஒராங் ராமாய் கம்போங் ஜயா செத்தியா பெஸ்தாரி ஜெயா மண்டபத்திற்குத் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.








