Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு விசாரணைக்குழு அமைக்ககப்பட்டது
தற்போதைய செய்திகள்

சிறப்பு விசாரணைக்குழு அமைக்ககப்பட்டது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 02-

தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ நிபுணர் ஒருவர், சபா, லஹத் டத்து அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த காலத்தில் பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ Dr Dzulkefli Ahmad இன்று அறிவித்தார். மருத்துவம், மனநலம், சுகாதாரம் மற்றும் பகடிவதை தடுப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டுள்ள ஐவர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவினர், இவ்விவகாரத்தை விசாரணை செய்வர்.

இந்த சிறப்பு விசாரணைக்குழு, முன்னாள் பொதுச் சேவைத்துறை தலைமை இயக்குநர் Tan Sri Borhan Dollah தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் டே டியென் யா என்ற அந்த பெண் மருத்துவ நிபுணர்,லஹாட் டத்து மருத்துவமனையில் தனது மேல் அதிகாரியின் பகடிவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தாம் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி