புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜார் என்ற இடத்தில் ஒரு வயது குழந்தை சித்ரவதை செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தக் குழந்தையின் 20 வயது தாயார், அவரின் காதலன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.50 மணியளவில் செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டட அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது , அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆடவர், அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரியவந்துள்ளது. அக்குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்த மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் அந்த குந்தையின் தாயார், அவரின் 30 வயது காதலன், குழந்தையின் 40 வயது மதிக்கத்தக்க பாட்டி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை அடித்தற்கான காயத் தழும்புகள் உடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


