புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜார் என்ற இடத்தில் ஒரு வயது குழந்தை சித்ரவதை செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தக் குழந்தையின் 20 வயது தாயார், அவரின் காதலன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.50 மணியளவில் செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டட அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது , அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆடவர், அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரியவந்துள்ளது. அக்குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்த மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் அந்த குந்தையின் தாயார், அவரின் 30 வயது காதலன், குழந்தையின் 40 வயது மதிக்கத்தக்க பாட்டி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை அடித்தற்கான காயத் தழும்புகள் உடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


