Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பிரஜை தட்சணாமூர்த்திக்கு வரும் வியாழக்கிழமை மரணத் தண்டனை நிறைவேற்றம்
தற்போதைய செய்திகள்

மலேசியப் பிரஜை தட்சணாமூர்த்திக்கு வரும் வியாழக்கிழமை மரணத் தண்டனை நிறைவேற்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காக மரணத் தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒரு மலேசியப் பிரஜையான கே. தட்சணாமூர்த்திக்கு வரும் வியாழக்கிழமை சாங்கி சிறைச்சாலையில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தட்சணாமூர்த்தியின் மரணத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சட்டப் போராட்டங்களும் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் தட்சணாமூர்த்திக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை அறிவித்துள்ளது.

இதனை தட்சணாமூர்த்தியின் முன்னாள் வழக்கறிஞரான எம். ரவி தெரிவித்தார். அந்த மலேசிய இளைஞருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை கடிதம் வாயிலாக தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டார்.

மரணத் தண்டனைக்குக் காத்திருக்கும் தட்சணாமூர்த்தியை அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடைசியாக பார்ப்பதற்கு சாங்கி சிறைச்சாலை வருகையாளர் நேரத்தை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீடித்துள்ளதாக ரவி தெரிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 44.96 கிராம் diamorphine போதைப்பொருளைக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தட்சணாமூர்த்திக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து