மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சீனப் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 முதல் 62 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் 5 பேரும் “கெங் குவாங்சி” என்றழைக்கப்படும் திருட்டுக் கும்பலின் உறுப்பினர்கள் என்றும் நம்பப்படுகின்றது.
அக்கும்பல், மலாக்காவின் பிரபல சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.








