Mar 23, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்பதில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து அந்நிய நாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்த போதிலும், நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

காஸா மற்றும் பாலஸ்தீனப் பிரச்சனைகளில் அதிகக் குரல் எழுப்புவதில் அரசாங்கமும் பிரதமரும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், உண்மையில் அவர் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் கண்காணிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

உணர்ச்சிகளால் இயக்கப்படாத மலேசியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாடு தற்போது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எந்தவோர் அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதாமல், பாதுகாப்பின் அனைத்து அம்சங்களும் முறையாகக் கையாளப்படுவதை உறுதிச் செய்ய, தேசிய பாதுகாப்பு மன்றம் அவ்வப்போது விளக்கங்களை வழங்கி வருவதாக டத்தோ ஃபாமி மேலும் கூறினார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை