Mar 31, 2026
Thisaigal NewsYouTube
காரின் இடிப்பாட்டில் கால்கள் சிக்கிக்கொண்டு ஆடவர் அவதி
தற்போதைய செய்திகள்

காரின் இடிப்பாட்டில் கால்கள் சிக்கிக்கொண்டு ஆடவர் அவதி

Share:

கெர்தே, டிச.9-


கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் காரின் எண்ணெய் பெடலில் இரு கார்களும் சிக்கிக் கொண்ட நிலையில் ஆடவர் ஒருவர் சுமார் 40 நிமிடம் பெரும் அவதிக்குள்ளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 7.40 மணியளவில் திரெங்கானு, கெமாமான், கெர்தே, ரந்தாவ் பெட்ரோனாஸ் வீடமைப்புப்பகுதி அருகில் நிகழ்ந்தது.

அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர், பெரோடுவா மைவீ காரின் இடிபாட்டிலிருந்து அந்த ஆடவரை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் செயலாக்க கமாண்டர் முகமட் நஸ்ரி அகமட் நஸ்ரி தெரிவித்தார்.

Related News