May 4, 2026
Thisaigal NewsYouTube
அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு

Share:

காணாமல் போன சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டின் குடும்பத்தாருக்கு 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் விண்ணப்பத்திற்கு, அம்ரியின் மனைவி நோர்ஹயாத்தி அரிஃபின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அம்ரி சே மாட் காணாமல் போனது குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக, அரசாங்கமும் போலீஸ் துறையும் அவரது குடும்பத்தாருக்கு 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள அரசு, அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கக் கோரியுள்ளது.

இது குறித்து நோர்ஹயாட்டியின் வழக்கறிஞர் சுரேந்திர அனந்த் கூறுகையில், "இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைத்தாலும், காணாமல் போனது குறித்த விசாரணையைத் தொடரலாம் என்ற எங்கள் சமரசத் திட்டத்தை அரசு நிராகரித்துவிட்டது. இந்தத் தடை விண்ணப்பம் என்பது விசாரணையைத் தாமதப்படுத்தும் ஒரு முயற்சியே" என்று குற்றம் சாட்டினார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 11-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Related News