நாட்டில் அடுத்த ஆண்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இளையோர்களுக்கான தேசிய பயிற்சி சேவை பி.எல்.கே.என் 3.0 , வட, தென்கொரியா போன்ற நாட்டின் பாதுகாப்பில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள இதர நாடுகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மேற்கொள்ளப்படாது என்று அரசாங்கம் இன்று உறுதி அளித்துள்ளது.
பி.எல்.கே.என் 3.0 தேசிய பயிற்சி, சேவை முழுக்க முழுக்க இளையோர்கள் மத்தியில் நாட்டைப்பற்றையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விதைப்பாகவே இருக்கும். அதன் பாடமுறையும் அத்தகைய தன்மையிலேயே அமைந்து இருக்கும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இன்று உறுதி அளித்துள்ளார்








