Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இந்திய மாதுவை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது
தற்போதைய செய்திகள்

இந்திய மாதுவை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது

Share:

கடந்த ஆகஸ்ட் மாதம் பூச்சோங்கில் உள்ளூரை சேர்ந்த இந்திய மாதுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேடப்பட்டு வந்து இந்தியாவைச் சேர்ந்த சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த சாமியார் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி போலீசாரால் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்பரிந்தென்டன் இசுதீன் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாந்தீரீக சடங்கு செய்வதாக கூறி, உள்ளூரை சேர்ந்த 30 வயது மாதுவை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றப் பின்னர் வீடு திரும்பும் போது அந்த மாதுவை காருக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சாமியாருக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு பின்னர் அதிர்ச்சியில் இருந்த அந்த மாது, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த சாமியாருக்கு எதிராக போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக அந்த சாமியாரை போலீசார் தேடி வந்தனர்.

அந்த மாதுவிற்கு சொந்தமான காரில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் சில நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக இசுதீன் அப்துல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து