கடந்த ஆகஸ்ட் மாதம் பூச்சோங்கில் உள்ளூரை சேர்ந்த இந்திய மாதுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேடப்பட்டு வந்து இந்தியாவைச் சேர்ந்த சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த சாமியார் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி போலீசாரால் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்பரிந்தென்டன் இசுதீன் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாந்தீரீக சடங்கு செய்வதாக கூறி, உள்ளூரை சேர்ந்த 30 வயது மாதுவை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றப் பின்னர் வீடு திரும்பும் போது அந்த மாதுவை காருக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சாமியாருக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்னர் அதிர்ச்சியில் இருந்த அந்த மாது, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த சாமியாருக்கு எதிராக போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக அந்த சாமியாரை போலீசார் தேடி வந்தனர்.
அந்த மாதுவிற்கு சொந்தமான காரில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் சில நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக இசுதீன் அப்துல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


